Posts

Showing posts from September, 2023

இனி பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க குறைதீர்வு எண் மற்றும் வலைதளம் தொடக்கம்..!

Image
  இனி பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க குறைதீர்வு எண் மற்றும் வலைதளம் தொடக்கம்..!        ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குறைகளை களையும் பொருட்டு 'ஊராட்சி மணி' என்கிற அமைப்பு ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.      இதன்மூலம், பொதுமக்கள், தங்கள் குறைகளைத் தெரிவிக்கஊராட்சிகளைத் தொடர்பு கொள்ளும் வகையில் இலவச குறைதீர்வு அழைப்பு எண் '155340' மற்றும் 'Ooratchimani.in' என்ற வலைதளம் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை மூலம் பொதுமக்கள் எளிதில் அணுக முடியும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் புகார் மீது தீர்வு காணப்படும். மேலும் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள்ஆகியோருக்கு ஏற்படும் குறைகள், சந்தேகங்களை 'ஊராட்சி மணி' மூலம் அணுகி பதில் பெறும்வகையில் இச்சேவை உருவாக்கப்பட்டுள்ளது.     இந்த சேவையை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ப.செந்தில்குமார், இயக்குநர் பா.பொன்னைய...

மோடிக்கு டீ வழங்கும் ரோபோ

Image
  மோடிக்கு டீ வழங்கும் ரோபோ  !!!!!    அகமதாபாத்:குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள அறிவியல் நகருக்கு சென்று அங்குள்ள ரோபோக்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார்.     ரோபோட் கேலரியில் உள்ள டிஆர்டிஓ ரோபோக்கள் மற்றும் மைக்ரோபோட்கள் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார். விவசாயம், மருத்துவம், விண்வெளி என பல்வேறு துறைகளில் பல்வேறு ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதை பார்த்தனர். ரோபோட் கேலரியில் உள்ள ஓட்டலுக்குச் சென்ற மோடிக்கு அங்கிருந்த ரோபோக்களால் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.      

இன்ஸ்டாவை போலவே வாட்ஸ்அப்-லும் Channel அம்சம் அறிமுகம்.. அது என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?

Image
  இன்ஸ்டாவை போலவே வாட்ஸ்அப்-லும் Channel அம்சம் அறிமுகம்.. அது என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?         உலகளவில் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் Channels என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனல் அம்சத்தைப் போலவே, மெட்டாவின் வாட்ஸ்அப் இப்போது பயனர்கள் Channel மூலம் அதிக குழுக்களுக்கு செய்திகளை அனுப்ப உதவுகிறது.    வாட்ஸ்அப் Channels வழக்கமான சேட்களில் இருந்து மாறுபட்டது. அது பின் தொடர்பவர்களின் அடையாளங்கள் மற்ற பின்தொடர்பவர்களுக்கு ரகசியமாக இருப்பதை உறுதிசெய்கிறது. மேலும் Channel என்பது ஒரு வழி ஒளிபரப்பு கருவியாக செயல்படுகின்றன. அட்மின், பின்தொடர்பவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் Channel, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வா...

சூப்பர் நியூஸ்..! மெட்ரோ ரயிலில் நாள் முழுவதும் பயணம் செய்யும் சிறப்பு திட்டம் அறிமுகம்..!

Image
  சூப்பர் நியூஸ்..! மெட்ரோ ரயிலில் நாள் முழுவதும் பயணம் செய்யும் சிறப்பு திட்டம் அறிமுகம்..!         சென்னையில் ஓரிடத்திற்கு விரைவாக செல்ல வேண்டுமென்றால் சென்னையில் வசிக்கும் பலரும் மெட்ரோ ரயில் பயன்படுத்துகின்றனர்.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.       இந்நிலையில் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய சலுகையை சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.அதன்படி 100 ரூபாயில் நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சென்று வரும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.அதாவது ஒரு சுற்றுலா அட்டையை 150 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதில் வைப்புத் தொகை 50 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்படும். இந்த சுற்றுலா அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லும். அந்த அட்டையை திருப்பிக் கொடுக்கும் போது 50 ரூபாய் திருப்பி தரப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்திருக்கிறது.                               ஞாயிறு விடுமுறை தினங்களை ஒட்டி ...