Posts

Showing posts from July, 2023

மூலப்பத்திரம்.. அதுவிடுங்க.. உயில் எழுதும்போது 5 விஷயம் முக்கியம்.. உயில் பத்திரம் பற்றி தெரியுமா?

Image
  மூலப்பத்திரம்.. அதுவிடுங்க.. உயில் எழுதும்போது 5 விஷயம் முக்கியம்.. உயில் பத்திரம் பற்றி தெரியுமா?      சென்னை: பத்திரப்பதிவு, நிலம், வீடு, சொத்து விவகாரங்களில் அடிக்கடி பயன்படுத்தும் சொல் உயில்.. இதற்கான அர்த்தம் தெரியுமா?      உயில் எழுத வேண்டுமானால் அதற்கான வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?       ஒருவருக்குச் சொந்தமான சொத்தை, அவர் வாழ்நாளிலேயே தன் குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தருவதே செட்டில்மெண்ட் பத்திரம் என்பார்கள். ஆனால், ஒருவர் தன் சொத்துக்களை தன் வாழ்நாளுக்கு பிறகு, தன் உறவினர்களுக்குச் சேரும்படி எழுதி வைக்கும் பத்திரத்தை "உயில் பத்திரம்" என்கிறார்கள். அந்த வகையில் இரண்டிற்கும் வித்தியாசம் நிறைய உள்ளது. செட்டில்மென்ட்டு பத்திரம்: தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது விருப்பப்படி, பிரித்து எழுதி வைக்கப்படுவதுதான் செட்டில்மென்டு பத்திரம் ஆகும்.     ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துகளை, தனக்கு பிறகு இன்னொருவருக்கு எழுதி வைப்பதுதான் உயில்.. இது முழுக்க முழுக்க சுயநினைவுடன...

3 நாட்கள் குடித்தால் போதும்!! வாயு உடல் சோர்வு மலச்சிக்கல் என அனைத்தும் மாயமாகிவிடும்!!

Image
  3 நாட்கள் குடித்தால் போதும்!! வாயு உடல் சோர்வு மலச்சிக்கல் என அனைத்தும் மாயமாகிவிடும்!!     சில நேரங்களில் நாம் சாப்பிடக்கூடிய உணவானது செரிமானம் ஆகாமல் நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு, வாயு தொல்லை, வயிறு கோளாறு, மலச்சிக்கல், வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.      அனைவரும் இப்பொழுது அதிகமாக ஓட்டல் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் உருவாக ஆரம்பிக்கிறது. இன்னும் சில பேருக்கு காலநிலை மாற்றங்களின் போது ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு சிரமம் ஏற்படும். 40 வயது தாண்டி விட்டாலே உடம்பில் ஒரு அசதி ஏற்பட்டு சோர்வாக காணப்படும். எனவே இது அனைத்தையும் சரி செய்து உடம்பிற்கு ஒரு தெம்பை அளிக்கக்கூடிய ஒரு பானத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை இங்கு அறிந்து கொள்ள இருக்கிறோம்.     தேவையான பொருட்கள்: பெருஞ்சீரகம்(அ) சோம்பு வெல்லம் ஏலக்காய் செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி அளவு சோம்பு மற்றும் 2 ஏலக்காயை கிள்ளி சேர்த்துக் கொள்ளவ...

டெபிட் கார்டு இல்லையா கவலை வேண்டாம்: செல்போன் மூலம் ஏடிஎம்-இல் பணம் எடுப்பது எப்படி?

Image
  டெபிட் கார்டு இல்லையா கவலை வேண்டாம்: செல்போன் மூலம் ஏடிஎம்-இல் பணம் எடுப்பது எப்படி?    இன்று நம்மில் பலர் யுபிஐ பேமெண்ட் வசதிகளை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். பெரிய கடைகள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை QR கோடை ஸ்கேன் செய்து யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது.        அரசு அலுவலங்களில் கூட யுபிஐ பேமெண்ட் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. யுபிஐ பயன்பாடு காரணமாக பலரும் டெபிட் கார்டுகளையோ, கையில் பணமோ வைத்திருப்பதில்லை. ஆனால், சில சமயங்களில் யுபிஐ வசதி இல்லாதபோது ஏடிஎம் மையங்களுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. அப்படிப்பட்ட தருணங்களில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் கையில் இல்லை என்றால் என்ன செய்வது. இனி கவலை வேண்டாம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் இல்லாமலேயே ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கலாம்.          இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்படி, Interoperable Cardless Cash Withdrawal (ICCW) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா வழங்கி வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் பொ...

ஐபோன் அசெம்ப்ளி ஆலையை வாங்க டாடா குழுமம் முடிவு: விஸ்ட்ரானுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை

Image
  புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இந்தியாவில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் அசெம்பிள் செய்கின்றன.    டாடா குழுமம் இந்தியாவில் ஆப்பிள் போன்களை அசெம்பிள் செய்யும் ஆலை அமைக்க சமீபகாலமாக விருப்பம் தெரிவித்து வந்தது. இந்நிலையில், அக்குழுமம் விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.      இது தொடர்பாக விஸ்ட்ரான் நிறுவனத்துடன் டாடா குழுமம்இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில் உள்நாட்டில் ஐபோனை அசெம்பிள் செய்யும் முதல் இந்திய நிறுவனமாக டாடா குழுமம் விளங்கும். கர்நாடகாவில் விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆலை உள்ளது. அந்த ஆலையில் 10 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். நடப்பு நிதி ஆண்டில் விஸ்ட்ரான் நிறுவனம் ரூ.14,700 கோடி மதிப்பில் ஐபோன் 14 மாடல்களை அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளது.